மூச்சுத்திணறல், நுரையீரலில் நீர்க்கோர்ப்பு, சிறுநீரக கோளாறு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சில நாட்கள் சிகிச்சை பெற்றார். அவருக்கு மேலும் நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார்.
அங்குள்ள மவுன்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபின், படிப்படியாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் இருந்து `டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட பின், சுமார் ஒரு மாத காலம் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்து, சிகிச்சை பெற்று வந்தார்.
பூரண குணம் அடைந்ததை தொடர்ந்து, 46 நாட்கள் சிங்கப்பூரில் இருந்த ரஜினிகாந்த் இன்று இரவு சென்னைவிமான நிலையத்தை வந்தடைந்தா சூப்பர் ஸ்டார். முக்கிய பிரமுகர்கள் வரும் வாயிலால் அங்கு கூடி இருந்த பல்லயிரக்கனக்கன ரசிகர்களை பார்த்து கை அசைத்தவாறு வெளியேவந்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவரத்தில் ஆர்ப்பரித்தனர் அப்பொது ரஜினிக்காந் சில ரசிகர்களுக்கு கைகொடுத்து அவர்களோடு உரையாடி பலத்த பொலிஸ்பாதுகாப்புடன் அவரது வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்து செண்றார் அப்போது அவருடன் அவருகைய மகள் ஐஸ்வர்யா உடன் இருந்தார் .
சூப்பர்ஸ்டரின் வருகையை ஒட்டி வீதி எங்கும் தலைவா வருக ! மறுபிறவியே வருக வருக என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பிரமாண்ட பதகைகள் சுவரொட்டிகள் அலங்கரிக்கப்பட்டு சென்னை எங்கும் ரசிகர்களால் விழாக்கோலம் பூண்டிருந்ததோடு . ரசிகர்களால் வீதியில் பயணித்தவர்களுக்கு இணிப்புக்கள் வழங்கி கொண்டடிய காட்ச்சிகள் மெய்சிலிர்க்கவைத்தன.

No comments:
Post a Comment